Connect with us

சினிமா

சிவகார்த்திகேயன்: நான் ரஜினியின் பாதிப்புதான்!

Published

on

நடிகர் ரஜினிகாந்தின் பாதிப்பு தனக்கு அதிகம் உள்ளது என நடிகர் சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ரேவதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்க கூடிய ‘ஆகஸ்ட் 16, 1947’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்தார்.

அப்பொழுது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். “‘மாவீரன்’ படப்பிடிப்பில் என்னுடைய போர்ஷன் இன்று தான் முடிவடைந்தது. இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்புமே முடிந்துவிடும். இந்த வருட இறுதிக்குள் இந்த படம் நிச்சயம் வெளியாகும். அதை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிப்பார்கள். இந்த படத்தை அடுத்து கமல் சார் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் படம் நடிக்க இருக்கிறேன். ஏ ஆர் முருகதாஸ் சார் படத்திற்கு, நான் தொகுப்பாளராக இருந்த பொழுது இசை வெளியீட்டு விழாவிற்கெல்லாம் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதன் பிறகு அவரது தயாரிப்பிலேயே ‘மான் கராத்தே’ படமும் நடித்திருக்கிறேன்.

இப்பொழுது அடுத்த கட்டமும் விரைவில் நடைபெறும்” என ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பதை இந்த மேடையில் சிவகார்த்திகேயன் உறுதி செய்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் படத்தின் தலைப்பான ‘மாவீரன்’ வைத்துள்ளது குறித்து கேட்ட பொழுது, “அதை படக்குழு தெளிவுபடுத்தும். ஆனால், நிறைய பேர் என்னிடம் ரஜினிகாந்தின் சாயலில் நான் பல விஷயங்கள் செய்வதாகக் கேட்கிறார்கள்.

நான் மிமிக்ரி செய்து கொண்டிருந்த காலத்தில் எல்லாம் அதிகமாக ரஜினி சாரை தான் அதிகம் இமிடேட் செய்வேன். இமிடேட் என்பதையும் தாண்டி அவருடைய பாதிப்பு எனக்கு இருக்கிறது. இயல்பாகவே என்னிடம் அது வந்துவிடும். அவருடைய மிகப் பெரிய ரசிகன் நான். அவரைப் போலவே நான் செய்கிறேன் என்பது எனக்கு சந்தோஷம்தான்” என கூறியிருக்கிறார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!