சினிமா

அம்மா மீது இதனால் வருத்தம்’: நடிகை சமந்தா!

Published

on

தன் அம்மா மீது இந்த விஷயத்தில் வருத்தம் உண்டு என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தேவ் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய ‘சாகுந்தலம்’ திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக தீவிர ப்ரோமோஷன்களில் நடிகை சமந்தா ஈடுபட்டுள்ளார். பான் இந்தியா படமாக வெளியாகக்கூடிய இந்த படத்தின் புரோமோஷனுக்காக சமீபத்தில் கேரளாவில் கலந்து கொண்டார் சமந்தா.

Samantha Emotional Shakunthalam has always been my favorite film

அதில் நடிகை சமந்தா பேசியதாவது, “நான் தமிழ், தெலுங்கு, பாலிவுட் வரை படங்களில் நடித்து விட்டேன். ஆனால், மலையாளத்தில் இன்னும் நான் படங்கள் நடிக்க ஆரம்பிக்காதது வருத்தம் தான். என் அம்மா ஒரு மலையாளி. ஆனாலும் எனக்கு மலையாளம் கற்றுக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். அதில் எனக்கு அவர் மீது வருத்தம் உண்டு.

எனக்கு மலையாள படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே மலையாளம் கற்றுக்கொள்வேன். எனக்கு விருப்பமான நடிகர்களுடன் இங்கு இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை உண்டு. எப்போதாவது ஒரே போலவே நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றினால் நடிப்பில் வித்தியாசம் காட்ட நான் அவ்வப்போது மலையாள படங்களை தான் பார்த்து நடிப்பு கற்றுக் கொள்வேன்” என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version