சினிமா செய்திகள்

‘ஏ.ஆர்.ரஹ்மான் யாரு… அவர எனக்குத் தெரியாதே’- தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா!

Published

on

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தனக்குத் தெரியாது என தெலுங்கு திரைப்பட நடிகரான பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராகக் கருதப்படுபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. என்.டி.ராமாராவ் மகனான பாலகிருஷ்ணாவுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மீம்ஸ்களுக்கு ஏற்ற கன்டென்ட் தருபவராக பாலகிருஷ்ணாவை தமிழ் ரசிகர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா தனக்கு ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் யார் என்று தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளது கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது. அவர் கூறுகையில், “விருதுகள் எப்போதும் என் கால் தூசிக்கு சமானம். தெலுங்கு சினிமாவுக்கு எங்கள் குடும்பம் ஆற்றிய பங்குக்கு ஈடு இணையே கிடையாது.

யாரோ ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் வாங்கியிருக்காராமே. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. என்.டி.ஆர்-க்கு பாரத ரத்னா எல்லாம் அவரது சுண்டு விரலுக்குச் சமானம். அதனால் எங்கள் குடும்பத்து முன் இந்த விருதுகள் தான் வெட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

சமுக வலைதளங்களில் இசைப்புயல் ரஹ்மானின் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவுக்கு எதிராக கேலி மீம்ஸ்கள், கிண்டல் வீடியோ மீம்ஸ்கள் எனப் பதிவிட்டு தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version