தமிழ்நாடு
நான் ஒன்னும் சென்சார் போர்டு கிடையாது: நழுவிய அமைச்சர் ஜெயக்குமார்!
பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என செய்தியாளர்கள் பலமுறை நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் அவர்களிடையே அந்த கேள்வியை திரும்ப கேட்டு சமாளித்தார்.
இந்நிலையில் இந்த கேள்வியை தற்போது செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயகுமாரிடம் எழுப்பியுள்ளனர். சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஜெயகுமார். அப்போது தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, மத்திய அரசிடம் தமிழகத்திற்கு தேவையான உரிமைகளை பெற்று வருகிறோம். மற்றபடி எந்த கட்சி நல்ல கட்சி என்று சர்ட்டிபிகேட் கொடுக்க நான் சென்சார் போர்டு கிடையாது என்று கூறி நழுவினார் அமைச்சர் ஜெயகுமார்.