சினிமா செய்திகள்

‘யார் யாருடன் இருந்தாலும் எனக்கு கவலையில்லை’: சமந்தா!

Published

on

நாக சைதன்யா- ஷோபிதா உறவு குறித்து சமந்தா பேசியுள்ளதாக வெளியான செய்திக்கு சமந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய சமந்தா கடந்த 2017-ல் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கடந்த ஆண்டு இருவரும் தங்களது விவாகரத்தை சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா, நடிகை ஷோபிதாவை டேட் செய்து வருவதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. ஆனால், இந்தப் புகைப்படங்கள் பற்றியோ, இருவரும் டேட் செய்வது குறித்தோ எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு கவலை இல்லை. காதலுக்கு மதிப்பளிக்காதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் அவர்களுக்குக் கண்ணீரைத் தான் தருவார்கள். குறைந்தபட்சம் அந்த பெண் வாழ்க்கையாவது மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியானது.

ஆனால், தான் இதுபோன்ற ஒரு செய்தியை எப்போதும் தெரிவிக்கவில்லை என நடிகை சமந்தா மறுப்புத் தெரிவித்து தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version