தமிழ்நாடு

அதிமுகவில் மோடியை மிரட்டக் கூடியவன் நான் மட்டுமே: தம்பிதுரையின் பிரச்சார யுக்தி!

Published

on

அதிமுக சார்பில் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தம்பிதுரை நேற்று தனது பிரச்சாரத்தின் போது, அதிமுகவில் மோடியை மிரட்டக் கூடியவன் நான் மட்டுமே எனவே எனக்கு வாக்களியுங்கள் என கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தம்பிதுரை சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக, பாஜக கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து ஊடகங்களில் பேசி வந்தார். இந்நிலையில் தம்பிதுரைக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காது என்ற நிலையே நீடித்து வந்தது. இதனையடுத்து தம்பிதுரை அப்படியே உல்டா அடித்து பாஜகவையும், பிரதமர் மோடியையும் புகழ ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் மீண்டும் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் தம்பிதுரை.

இந்நிலையில் நேற்று கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தம்பிதுரை, அதிமுகவில் மோடியை மிரட்டக் கூடியவன் நான் மட்டுமே. நீங்களே பார்த்திருப்பீங்க, கடைசி வரை மோடிய எதிர்த்து குரல் கொடுத்தது நான்தான். மத்தியில அடுத்தும் மோடி ஆட்சிதான் வரும், நான் ஜெயிக்கலனா வேற யாராலும் மோடிய மிரட்டி திட்டம்லாம் வாங்கித் தர முடியாது. எனவே எனக்கு ஓட்டுப் போட்டு வெற்றிபெற வையுங்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Trending

Exit mobile version