உலகம்

அரசியலில் பிரியங்கா காந்தி என்ட்ரி.. ராகுல் ரியாக்சன் என்ன தெரியுமா?

Published

on

டெல்லி: பிரியங்கா காந்தி தன்னுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு எப்படி எதிர்வினையாற்ற போகிறார் என்பதுதான் கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது பேட்டியில், நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறேன். பிரியங்கா காந்தி என்னுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா மிகுந்த வலிமையான தலைவர். பாஜக இப்போது பெரிய பயத்தில் இருக்கிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version