சினிமா செய்திகள்

கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள்: 20 வருடங்கள் கழித்து மனம் திறந்த சிம்ரன்

Published

on

தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சிம்ரன். இவரது படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆரம்ப காலகட்டத்தில் கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என்றும் அதன் பிறகு நான் நன்றாக நடிப்பதைப் பார்த்து எனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது என்றும் கூறினார் .

எந்த ஒரு நடிகையும் ஆரம்ப காலம் சோதனையானது என்றும், கிளாமரை காட்டி தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்றும் அதன் பிறகு நமது திறமையை வெளிப்படுத்தி இந்த துறையில் நாம் முன்னேறலாம் என்றும் அவர் கூறினார் .

ஆரம்ப காலத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும் கஷ்டப்படாமல் எந்த நல்ல வாழ்க்கையும் கிடைக்காது என்றும் அவர் கூறினார். துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்கள் எனக்கு கிடைத்ததால் என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்த முடிந்தது என்றும் அந்த இணை இயக்குனர்களுக்கு எனது அன்று என்றும் தெரிவித்துள்ளார் .

கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள் என 20 வருடங்கள் கழித்து நடிகை சிம்ரன் மனம் திறந்து கையில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending

Exit mobile version