கிரிக்கெட்

எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்: தோனி உருக்கமான பேச்சு!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது. அபாரமாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். போட்டிக்கு பிறகு, சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மிகவும் உருக்கமாக பேசியிருப்பது, ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தோனி உருக்கமான பேச்சு

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசுகையில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் தான் நான் இருக்கிறேன். இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே எனக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. இன்று இங்கு விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ரசிகர்கள் அனைவரும் எனக்கு நிறைய அன்பை கொடுத்து இருக்கிறார்கள். போட்டி முடிந்த பிறகும் இப்போது கூட நான் பேசுவதை கேட்பதற்காக நீண்ட நேரம் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள் என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தனது கிரிக்கெட் வாழ்வில் தடைசி ஆட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் விளையாட வேண்டும் என ஏற்கனவே தோனி கூறி இருக்கிறார். இந்நிலையில், நேற்று தோனி பேசியது சென்னை ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தோனியை பார்ப்பதற்காகவே சென்னையில் ரசிகர்கள் கூடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று போட்டி முடிந்த பிறகு தோனியின் ரசிகர் ஒருவர், உங்களுடன் ஒரே ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என ஒரு பெரிய பதாகையில் எழுதி மைதானத்தில் இருந்து காண்பித்தார்.

seithichurul

Trending

Exit mobile version