தமிழ்நாடு

நான் ஜெயலலிதா, கருணாநிதி மாதிரி… லீடர் அண்ணாமலை!

Published

on

பாஜகவினர் அதிமுகவில் இணைந்து வரும் காட்சிகள் தொடர்ந்தவாறு உள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை, ஜெயலலிதா, கருணாநிதி போல் ஒரு தலைவர் என்றும் நான் எடுக்கும் முடிவில் உறுதியாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

#image_title

செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, என்னுடைய முடிவுகளில் எந்த பாரபட்சமும் இருக்காது. தலைவர்கள் முடிவெடுப்பதில் நான்கு பேர் கோபித்துக் கொண்டு வெளியே போக தான் செய்வான். அண்ணாமலையான நான் லீடர். லீடர் மாதிரி தான் முடிவெடுப்பேன். மேனேஜர் மாதிரி முடிவெடுக்க மாட்டேன்.

ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். லட்சக்கணக்கான தொண்டர்களின் தலைவன் நான். கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ? துணிந்து எடுத்துக் கொண்டே இருப்பேன். வரும் காலத்தில் இன்னும் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது.

தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகளில் இருந்து பெரும் தலைவர்கள் விலகி மாற்றுக் கட்சியில் இணையும் பொழுது எப்படி அந்த கட்சியின் தலைவர்கள் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முடிவு எடுத்தார்களோ அதே போல் நானும் ஒரு தலைவன். தலைவனாகவே முடிவெடுப்பேன். தலைவன் எடுக்கும் முடிவில் விலகி செல்பவர்கள் அவர்களின் விருப்பப்படி விலகி செல்லட்டும். அதற்கு நான் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் மேனேஜர் போல் அமர்ந்து இரண்டு இட்லி, தோசை சாப்பிட்டு விட்டு செல்வதற்காக நான் இந்த பொறுப்பிற்கு வரவில்லை. மூன்றாவது கியரில் மெதுவாக பயணிப்பதாகவே நான் இப்பொழுது கருதுகிறேன். நிச்சயமாக 2024 தேர்தலுக்கு முன்பு ஐந்தாவது கியர் செல்லும் வேகத்தில் பயணிப்பேன் என்றார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version