தமிழ்நாடு

தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்: இன்று ஒப்புதல்!

Published

on

தமிழகத்தில் ஏற்கனவே நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி பெரும் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, தமிழகத்தில் மட்டும் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இந்த திட்டத்தை ஓ.எச்.ஜி.சி நிறுவனமும், வேதாந்தா நிறுவனமும் செயல்படுத்த உள்ளது.

தமிழகத்தில் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல வேதாந்தாவிற்கு மற்ற இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ள இந்த மூன்று திட்டங்களும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டெல்லியில் இன்று கையெழுத்தாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version