கிரிக்கெட்
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் முதலாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அந்த அணி ஐதராபாத் அணியின் அதிரடி பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் மற்றும் மயங்க் அகர்வால் தலா 22 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் அணியின் கலீல் முகமது மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதும் அந்த அணிக்கு தற்போது இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று இரண்டு புள்ளிகளை பெற்று உள்ளது என்பது தெரிந்ததே.