இந்தியா
தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு: 5 லட்சம் பணத்துடன் தப்பித்த மர்ம நபர்!
ஹைதராபாத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென வந்து துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள தனியார் வங்கியில் இன்று வங்கி ஊழியர்கள் ஏடிஎம்மில் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர். ஆனால் வங்கி ஊழியர்கள் பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியதை அடுத்து அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 5 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு பைக்கில் மாயமாய் மறைந்து விட்டனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குண்டடிபட்ட வங்கி ஊழியர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பட்டப்பகலில் 2 மர்ம நபர்கள் வங்கி ஏடிஎம்மில் ரூபாய் 5 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவலை அறிந்ததும் காவல்துறை ஆணையர் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்து வருகிறார். அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் குறித்த தகவல்களை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.