இந்தியா

பல நாட்களாக குளிக்காத மனைவியை விவாகரத்து செய்ய முன்வந்த கணவர்!

Published

on

பல நாட்களாக தனது மனைவியை குளிக்கவில்லை என காரணம் கூறி விவாகரத்து செய்ய கணவர் ஒருவர் முன் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் தம்பதியராக இருக்கும் கணவன் மனைவிகள் பலர் வினோதமான காரணங்களுக்காக விவாகரத்து செய்ய முன்வந்துள்ளனர் என்பதும், அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் தனது மனைவி தினமும் குளிப்பது இல்லை என்று கூறி விவாகரத்து அளிக்குமாறு கேட்டுள்ளார். விவாகரத்துக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று அவரை ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது கணவருக்கு நீதி மன்றத்தின் சார்பில் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாகவும் அவரது மனதை மாற்ற கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் அவருடைய மனைவியையும் அழைத்து கணவருக்காக இல்லையென்றாலும் ஆரோக்கியத்திற்காக தினமும் குளிப்பது நல்லது என்று கவுன்சிலிங் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version