Connect with us

இந்தியா

3 ஆண்டுகளாக குழந்தைகளுடன் தன்னைத்தானே சிறை வைத்து கொண்ட பெண்.. கணவரின் அதிர்ச்சி தகவல்..!

Published

on

மூன்று ஆண்டுகளாக பெண் ஒருவர் தன்னைத்தானே குழந்தைகளுடன் வீட்டில் சிறை வைத்துக்கொண்ட சம்பவம் அவருடைய கணவரின் வாக்குமூலம் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை தாக்கிய போது குருகிராம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி விடும் என்று பயந்து வீட்டை பூட்டி கொண்டார். கணவர் அலுவலகம் சென்ற நேரத்தில் அவர் வீட்டை போட்டுக் கொண்ட நிலையில் கதவை திறக்க முடியாது என்றும் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கதவை திறந்தால் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொள்ளும் என்றும் அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

தனது மனைவியை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர் சமாதானம் ஆகாததால் வேறு வழி இன்றி அருகில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து அவர் தனியாக தங்கி உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மளிகைப் பொருள்கள் உள்பட அனைத்தையும் அவர் வாங்கி கதவின் முன் வைத்துவிட்டு வந்து விடுவார் என்றும் அவரது மனைவி கதவை திறந்து அந்த பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் கதவை அடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் சிலிண்டர் கேஸ் கூட வாங்கவில்லை என்றும் இண்டக்சன் ஸ்டவ் பயன்படுத்த தொடங்கிவிட்டார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் வெளி உலக தொடர்பை முழுவதுமாக துண்டித்துக் கொண்ட அவர் தனது குழந்தைகளை ஆன்லைன் படிப்புக்கு மற்றும் செல்போனை அனுமதித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கி வெளியே இயல்பு நிலை திரும்பியது கூட தெரியாமல் அவர் மூன்று ஆண்டுகளாக வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அந்த பெண்ணையும் அவரது குழந்தைகளையும் வெளியே கொண்டு வந்தனர்.

அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கிவிட்டது என்றும் இனிமேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது என்றும் அதையும் மீறி கொரோனா வைரஸ் வரும் என்ற பயம் இருந்தால் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். அதனை அடுத்து தற்போது அந்த பெண் சமாதானம் ஆகி உள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு பயம் காரணமாக மூன்று ஆண்டுகள் தன்னையும் தனது குழந்தைகளையும் சிறை வைத்துக் கொண்ட பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!