தமிழ்நாடு

காதல் கணவர் இறந்ததை கேள்விப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

Published

on

காதல் கணவர் விபத்தில் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல் புதுச்சேரி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தில் தனது கணவர் உயிரிழந்தார் என்ற தகவலை கேட்டதும் ரமேஷின் மனைவி சரளா என்பவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ரமேஷின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த நிலையில் திடீரென அவர் காணாமல் போனார்.

இதனையடுத்து அவரை உறவினர்கள் தேடியபோது அவர் மருத்துவமனையின் கழிவறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து ரமேஷ், சரளா ஆகிய இருவரின் உடல்களையும் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கை அவர்களது உறவினர்கள் நடத்தினார்கள். கணவன் மீது இருந்த காதல் காரணமாக கணவன் உயிரிழந்த உடனே மனைவியும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷ் மற்றும் சரளா ஆகிய இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version