தமிழ்நாடு

கட்டிய மனைவிய வைத்துக்கொண்டே நண்பனுடன் ஓரினச்சேர்க்கை

Published

on

சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 28 வயதான பொறியாளர் பாண்டியராஜன் என்பவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் தேனிலவுக்கு வெளியூர் சென்றனர். அப்போது பாண்டியராஜன் தனது ஆண் நண்பர் தினேஷ் என்பவரையும் உடன் அழைத்துச்சென்றுள்ளார். தேனிலவில் மூன்று பேரும் விடுதி ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது பாண்டியராஜன் தனது மனைவியை விட்டுவிட்டு நண்பன் தினேஷ் உடன் தனியாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாண்டியராஜனின் மனைவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து பாண்டியராஜன் அடிக்கடி தினேஷை தனது வீட்டிற்கு அழைத்து தனி அறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் கூறி முறையிட்டுள்ளார் பாண்டியராஜனின் மனைவி. ஆனால் அவர்கள், அவன் சிறு வயதில் இருந்து இப்படிதான், திருமணத்திற்கு பின்னர் மாறிவிடுவான் என நினைத்தோம். ஆனால் அவன் மாறவில்லை. நீ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தினேஷ் உடன் பாண்டியராஜன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது மனைவிக்கும் பாண்டியராஜனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாண்டியராஜன் நீயும் எங்களுடன் சேர்ந்துகொள், மூன்று பேரும் ஒன்றாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட பாண்டியராஜன் உருட்டு கட்டையை எடுத்து மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த அனைத்தையும் கூறி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version