இந்தியா

மனைவியின் அந்தரங்க உறுப்பை ஊசி போட்டு தைத்த கணவர்…

Published

on

கணவன் மனைவிக்குள் முக்கிய பிரச்சனையாக இருப்பது சந்தேகம்தான். பல இடங்களில் சந்தேகம் அளவுக்கு மீறி சொல்லும்போது அது விபரீதமாக முடிவதுண்டு. சந்தேகத்தில் கொலைகள் கூட நடைபெறவதுண்டு.

இந்நிலையில், மனைவி மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாரோ என்கிற சந்தேகத்தில் அவரின் அந்தரங்க உறுப்பை ஊசி நூலால் கணவர் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிங்ரோலி மாவட்டத்தில் 65 வயது நபர் வசித்து வருகிறார். இவரின் மனைவிக்கு வயது 55. அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகத்தில் ஊசி நூலால் தனது மனைவியின் அந்தரங்க உறுப்பை தைத்துவிட்டதாக அப்பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த தையல் நீக்கப்பட்டது. இதனால் அவரின் பிறப்புறுப்பில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. மேலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்ணை துன்புறுத்தியதாக சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. எனவே, அவர தலைமறைவானார். ஆனாலு, தன் கணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அப்பெண் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Trending

Exit mobile version