Connect with us

தமிழ்நாடு

கணவரை எதிர்த்து போட்டியிட்ட மனைவிக்கு ஒரே ஒரு ஓட்டு: கணவர் அமோக வெற்றி!

Published

on

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு வினோதங்கள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஒரே ஒரு ஓட்டு பெற்ற வேட்பாளர், ஒரே ஒரு ஓட்டு கூட பெறாத வேட்பாளர், அனைத்து சின்னத்திலும் வாக்களித்த வாக்காளர்கள், வாக்குச் சீட்டை வீட்டிற்கு கொண்டுவந்து வாக்காளர் என பல்வேறு விவாதங்கள் நடந்து உள்ளது.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் ஒரே தொகுதியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் போட்டியிட்டதில் கணவர் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அவரது மனைவிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றது பெரும் வினோதமாக பார்க்கப்படுகிறது.

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தின் எட்டாவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் கருப்பையா என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவரது மனைவி ஈஸ்வரி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக உள்பட 6 வேட்பாளர்கள் களத்தில் நின்ற நிலையில் கருப்பையா 1702 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரது மனைவி ஈஸ்வரி ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஓட்டு ஓட்டையும் அவர் மட்டுமே செலுத்தி இருப்பார் என்பது யூகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கருப்பையா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது தேர்தல் வேலைக்கு பூத் ஏஜெண்டுகள் வேண்டும் என்பதால் என் மனைவியை நானே நிறுத்தினேன் என்றும் பொதுவாக வேறொருவரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என்றும் ஆனால் நான் என் மனைவியை நிறுத்தினேன் என்றும் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கூட எனக்காகத்தான் ஓட்டு சேகரித்தார் என்றும் அப்படி இருந்தும் அவருக்கு ஒரு ஓட்டு பெற்று உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கூறினார். இதுவும் ஒரு ராஜதந்திரமாக தேர்தல் விஷயத்தில் பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!