இந்தியா

இந்தக் காலத்துல இப்படி ஒரு மனிதரா?

Published

on

ரத்தன் டாடாவின் முன்னாள் ஊழியர் உடல்நல குறைவால் பாதிக்கப்படிருந்த நிலையில், அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

இந்தியாவின் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தின் சகாப்தமாக டாடா குழுமம் உள்ளது. உலகம் முழுவதும் பல தொழிற்குழுமங்களை நிர்வகிக்கும் டாடா நிறுவனம், தனது தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் உதவிகளை செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் வித்திட்டவர் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா.

இந்த நிலையில், ரத்தன் டாடாவின் மற்றொரு செயல், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 83  வயதாகும் ரத்தன் டாடா, தனது நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளார். இதனையடுத்து புனேயில் உள்ள முன்னாள் ஊழியரின் வீட்டிற்கே நேராகச் சென்று, அவரை நலம் விசாரித்துள்ளார் ரத்தன் டாடா.

ரத்தன் டாடாவின் எதிர்பாராத வருகையால், முன்னாள் ஊழியரும் அவரது குடும்பத்தினரும் இன்ப அதிர்ச்சியடைந்தனர். தள்ளாடும் வயதிலும் ரத்தன் டாடா தனது முன்னாள் ஊழியரின் வீட்டிற்கு சென்ற நலம் விசாரித்த சம்பவத்தை அந்த ஊழியர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர, சமூகவலைதளங்களில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Trending

Exit mobile version