தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அடுத்த சிக்கல்!

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நடந்த போது திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கூறப்பட்டது. அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தி ஜெயகுமார் மற்றும் அவரது தரப்பினர் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி சாலை மறியல் செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சாலை மறியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. அதனால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் திமுக தொண்டரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து மனித உரிமை ஆணையம் விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version