வணிகம்
பெரிய அளவில் பங்குசந்தையில் சரிவு.. அதிர்ச்சி!
மும்பை: மும்பை பங்குசந்தையில் இன்று பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.
இன்று காலை பங்கு சந்தை ஏற்றத்துடன்தான் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 36,924.72 புள்ளிகளுடனும், நிஃப்டி 11,164.40 புள்ளிகளுடனும் தொடங்கியது.
ஆனால் சில நிமிடத்தில் இதில் சரிவு ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
மாலையில் பெரிய சரிவுடன் முடிந்தது, சென்செக்ஸ் 710 புள்ளிகள் சரிவை சந்தித்த்து 36141.45 புள்ளியில் உள்ளது.
நிஃப்டி 170 புள்ளிகள் சரிவை சந்தித்து தற்போது 10994 புள்ளியில் உள்ளது.இதனால் அதிக அளவில் முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர்.