Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

பிஎப் கணக்குகளை இணைத்து வரி சேமிப்பது எப்படி?

Published

on

கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவைச் சரிசெய்ய, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் 55 லட்சம் பிஎப் கணக்கு வைத்துள்ள மாத சம்பள தாரர்கள் தங்களது பிஎப் பணத்தை எடுத்து செலவு செய்ய தொடங்கியுள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள், பிஎப் பணத்தை இடையில் எடுக்கும் முன்பு அது உங்கள் வருமான வரியை அதிகரிக்குமா என்றும் சரிபார்க்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் 5 வருடங்கள் வரை தொடர்ந்து பணி செய்த பிறகு பிஎப் பணத்தை இடையில் எடுக்கும் போது அந்த பணத்திற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

ஒருவேலை 5 வருடம் வரை ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் முன்பு, பிஎப் கணக்கில் உள்ள பணத்தை இடையில் எடுத்து பயன்படுத்தினால், பிஎப் கணக்கு மூலம் கிடைத்த வட்டி வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். அதேநேரம் உடல் நலக்குறைவு, வேலை செய்யும் நிறுவனம் மூடப்பட்டது அல்லது நிறுவனத்தில் ஏற்பட்ட அசாதாரமானன சூழல் போன்ற காரணங்களுக்கு பிஎப் பணத்தை இடையில் எடுத்தால் வரி விலக்கு உண்டு.

சிலர் 5 வருடத்திற்குள் பல்வேறு முறை நிறுவனம் மாறி வேலைக்கு சென்று இருந்தால், யுஏஎண் ஒன்றாக இருக்கும். ஆனால் பிஎப் கணக்கு வெவ்வேறாக இருக்கும். இது போன்ற சூழலில் முந்தைய நிறுவனத்தின் பிஎப் கணக்கையும், பிஎப் கணக்கையும் இணைத்தால் தான் தொடர்ந்து 5 வருடங்கள் பணியாறிய்யுள்ளதாக கருதப்படும்.

எனவே பிஎப் கணக்கில் உள்ள பணத்தை புதிய பிஎப் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்வது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பிஎப் கணக்கை ஆன்லைனில் டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

1) https://unifiedportal-mem.epfindia.gov.in/ என்ற இணைப்பிற்கு சென்று, யுஏஎண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

2) பிஎப் கணக்கில் உள்நுழைந்த பிறகு, ‘Online services’ என்ற மெனுவிற்கு சென்று One Member – One EPF Account என்பதை கிளிக் செய்க.

3) தனிநபர் விவரங்கள் மற்றும் நடப்பு வேலைக்கான பிஎப் கணக்கை சரிபார்க்கவும்.

4) அடுத்து முந்தைய நிறுவனத்தின் யுஏஎண் அல்லது பிஎப் கணக்கு விவரங்களை அளித்து ‘Get details’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5) முந்தைய நிறுவன ஊழியர் அல்லது நடப்பு நிறுவன ஊழியர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6) பின்னர் ‘Get OTP’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் யுஏஎண் கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்குக் கடவுச்சொல் அனுப்பப்படும். ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு ‘Submit’ என்பதை கிளிக் செய்யவும்.

பிஎப் கணக்கை இணைப்பதற்கான கோரிக்கைக்கு நிறுவனம் ஒப்புதல் வழங்கிய பிறகு, முந்தைய நிறுவனத்ஹ்டின் பிஎப் கணக்கிலிருந்த பணம் தற்போது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பிஎப் கணக்குடன் இணைக்கப்படும். இதற்கு 30 நாட்கள் வரை காலம் எடுத்துக்கொள்ளப்படும். இணைத்த பிறகு எஸ்எம்எஸ் மூலம் உங்கள் மொபைல் எண்ணிற்கு தெரிவிக்கப்படும்.

ஒருவேலை இடையில் என்ன நிலை என்று செக் செய்ய வேண்டும் என்றால், ‘Online services’ என்ற மெனுவிற்கு சென்று ’Claim Status’ என்பதை செக் செய்வதன் மூல்அம், உங்கள் பிஎப் கணக்கு இணைப்புக் கோரிக்கையின் நிலையை எளிதாக கண்டறிய முடியும்.

இதுபோல ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறும் போது, பிஎப் கணக்கை இணைத்த பிறகு, பிஎப் பணத்தை எடுப்பதற்கான கோரிக்கையை வைத்தால் தான் அதிக தொகையை இடையில் எடுக்க முடியும்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!