ஆரோக்கியம்

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு செய்வது எப்படி?

Published

on

நாவூறும் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு – இதை செய்து பாருங்கள், சூப்பரா இருக்கும்!

தமிழகத்தில் பல வகையான உணவு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில், இன்று நாஞ்சில் நாடு ஸ்டைலில் ஒரு சுவையான மீன் குழம்பு செய்யும் முறை பற்றி பார்க்கப்போகிறோம்.

அசைவ உணவு என்றால், கடல் உணவான மீன் பலருக்கு மிகவும் பிடித்தது. மீனை வைத்து, மீன் குழம்பு, பிரை, தொக்கு உள்ளிட்ட பல்வேறு ரெசிப்பிகள் செய்து சுவைத்து இருப்போம். இன்று நாஞ்சில் நாட்டுப் பாணியில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மீன் – 250 கிராம் (திருக்கை, வாளைமீன் தவிர)
சின்ன வெங்காயம் – 4
தேங்காய் துருவல் – 3/4 கப்
மிளகு – 3/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
தனியா தூள் – 2 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:

முதலில், மீனை தோல் எடுத்து சுத்தம் செய்துகொண்டு நன்றாக அலசிக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளுங்கள்.

மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், மிளகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு, அதனுடன் உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்து, காரம் மற்றும் உப்பை சரி பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கடாயில், சுத்தம் செய்து வைத்துள்ள மீனை, புளி மற்றும் மசாலா கரைசலை ஊற்றுங்கள். பின்னர் கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து, கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் தனியே வைக்கவும்.

மிதமான தீயில் இந்த கடாயை வைத்து, மீன் கலவையை கொதிக்க விடுங்கள். அதை சுழற்றி விடுங்கள். கிளறினால் மீன் உடைய நேரிடும்.

இறுதியாக, ஒரு பேனில் சிறிது எண்ணெய் சேர்த்து வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றுங்கள். இதற்குமேல், சுவையான நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு தயார்!

 

Poovizhi

Trending

Exit mobile version