தமிழ்நாடு
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் தற்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போதும் தினமும் 10 பேர் வரை கொரோனா வைரசால் உயிரிழந்து வருகின்றனர் என்பதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,549 என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் என அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
இந்த நிவாரண தொகையை பெறுவது எப்படி என்பது குறித்து தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அது குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ whats new பகுதியில் Covid-19 என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.