ஆரோக்கியம்

கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாகப் படித்து தெரிந்துகொள்ள வேண்டியவை!

Published

on

கர்ப்பிணிப் பெண்களுக்குக் குழந்தை பிறக்கும் பிரசவ தேதியை எளிதாகக் கணிக்க முடியும்.

அதில் பல பெண்கள் சரியான நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையைப் பெற்று எடுத்துவிடுவார்கள். ஆனால் சிலருக்கோ பிரசவ வலி அவ்வளவு எளிதாக வராது. இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அதற்கு என்று பல்வேறு வழிகள் உள்ளன. ஆனாலும் பலரும் விரும்புவது இயற்கையான முறையில் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையைப் பெற்று எடுப்பதாகும்.

எனவே இயற்கை முறையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி வர செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

பிரசவ வலி வரச் செய்யும் உடற்பயிற்சி

நீண்ட நடைப்பயிற்சி உட்பட, இதய துடிப்பை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள் செய்யலாம். ஒருவேலை இது பலனளிக்கவில்லை என்றாலும், மனச்சோர்வைக் குறைத்து, குழந்தை பிறக்க உடலைத் தயாராக வைக்கும்.

உடலுறவு செய்து பிரசவ வலி வர வைக்கலாமா?

கர்ப்பினிப் பெண்கள் கடைசி ஒரு வாரம் உடலுறவு வைத்துக்கொள்வது இயற்கை முறையில் பிரசவ வலி வரவைக்க உதவும் என்று கூற பல காரணங்கள் உள்ளன.

உதாரணத்துக்கு, உடலுறவில் புணர்ச்சி செய்யும் போது ஆக்ஸிடாஸின் சுரப்பிக்கும். இது ஜம்ப்ஸ்டார்ட் கருப்பை சுருக்கங்களுக்கு உதவக்கூடும். மேலும் ஆண்களின் விந்தணுக்களில் புரோஸ்டாக்லாண்டின் ஹார்மோன்கள் உள்ளன, அவை கர்ப்பப்பை பழுக்க உதவும்.

கடைசி ஒருவாரம் கர்ப்பினிப் பெண்கள் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்றாலும், பனிக்குடம் உடைந்த பிறகு உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இல்லை என்றால் தொற்று பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

முலைக்காம்புகளைத் தூண்டி பிரசவ வலி வர வைப்பது எப்படி?

முலைக்காம்புகளைத் தூண்டும் போது அது கருப்பை விரிவடையச் செய்து குழந்தை வெளியில் வர உதவும். ஆக்ஸிடாஸின் சுரப்பிக்க உதவும். பால் வெளியில் வரவும் உதவும். குழந்தைகளுக்குத் தாய்ப் பால் அளிக்க விரும்பும் பெற்றோர் கண்டிப்பாக முலைக்காம்புகளைத் தூண்ட வேண்டும்.

உங்களது துணை அல்லது தமக்குத் தாமாகவே முதலைகளைத் தூண்டுவது நல்லது. இப்படி செய்வதால் கர்ப்பிணிப் பெண்கள் செயற்கை முறையில் பிரசவ வலி வரச் செய்வதை தவிர்க, இயற்கையான முறையில் பிரசவ வலியைப் பெறலாம்.

பிரசவ வலி வர வைக்கும் ஆமணக்கு எண்ணெய்

29.57 முதல் 59.14 மில்லி ஆமணக்கு எண்ணெய்யைக் குடிக்கலாம். இப்படிக் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் வடை போன்றவற்றை ஆமணக்கு எண்ணெய்யில் செய்து சாப்பிடலாம். ஆனால் மருத்துவர் உதவியுடன் இதைச் செய்வது சிறந்தது. இது பிரசவ வலிக்கு, குழந்தை எளிதாக கர்ப்பப்பையில் இருந்து வெளியில் வரவும் உதவும்.

பிரசவ வலி வர வைக்கும் பேரீச்சம் பழம்

கர்ப்பிணிப் பெண்கள் கடைசி வாரத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பிரசவ வலியை இயற்கையாகப் பெறலாம் என்கிறது ஆய்வுகள். பிரசவத்தின் தொடக்கத்தில் கர்ப்பப்பை வாய் பழுக்க வைப்பது மற்றும் கர்ப்பப்பை வாய் விரிவாக்கம் செய்ய பேரீச்சம் பழம் உதவுகிறது.

Trending

Exit mobile version