இந்தியா

இப்படி கூட போராடலாமா சேட்டா.. புதுப்புது சபரிமலை போராட்டம்!

Published

on

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக வித்தியாசமான பல போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு நாளை அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த தீர்ப்பு வந்ததில் இருந்தே கேரளாவில் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து உள்ளது.

நாளைத்தான் அந்த அதிசயம் நடக்க போகிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நாளைத்தான் நுழைய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. போலீஸ்  பாதுகாப்பு இதற்காக அதிகப்படுத்தபட்டுள்ளது.

இதற்காக கடும் எதிர்ப்பு நிலவும் சூழ்நிலையில், பெண்கள் கோவிலுக்குள் செல்வதை தடுக்க பல்வேறு போராட்டங்களை இந்துத்துவா அமைப்புகள் கடைபிடிக்க உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version