Connect with us

தமிழ்நாடு

மேயர், நகர்மன்ற தலைவர்: மறைமுக தேர்வு நடப்பது எப்படி?

Published

on

தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மேயர், நகராட்சி தலைவர் உள்பட ஒரு சில பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தல் எப்படி நடக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.

வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு கூடியவுடன் மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியான 15 நிமிடங்களுக்குள் வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்யலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் தேர்தல் நடத்தப்படும். இல்லையேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும். தேர்தல் நடத்தப்படும் நிலை வந்தால் வேட்பாளர்களின் பெயர்களை எழுதி வாக்கு சீட்டு தயார் செய்யப்படும். இந்த வாக்குச்சீட்டுகள் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் வழங்கப்படும்.

அந்தவகையில் நகர்மன்றத் தலைவர் மற்றும் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு கவுன்சிலர்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்யலாம், அந்த வாக்கை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் ஆணையர் மற்றும் செயல் அலுவலரிடம் கையெழுத்து பெற்று வாக்குப்பெட்டிகள் போட வேண்டும்.

அனைத்து உறுப்பினர்களும் வாக்குப் போட்ட பின் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் யார் என்பது அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பை அடுத்து தேர்வு செய்யப்பட்ட மேயர் அல்லது நகர்மன்ற தலைவர் இருக்கையில் அமர வைக்கப்படுவார். இந்த முறையில்தான் மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணை நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!