பர்சனல் ஃபினான்ஸ்
நவம்பர் 5-ம் தேதி கடன் தவணை தடை காலத்திற்கான வட்டி கேஷ்பேக் வழங்கப்படும்? உங்களுக்கு எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்?
![Interest Rate - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/10/Interest-Rate.jpg)
கோவிட்-19 பொது முடக்கக் காலத்தில், வங்கிகளில் வாங்கிய கடன் தவணையைத் திருப்பி செலுத்துவதற்கான சலுகையைப் பெற்றவர்களுக்கு, வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதை நவம்பர் 5-ம் தேதி செயல்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதனால் மார்ச் 1-ம் தேதிக்கு முன்பு 2 கோடி ரூபாய்க்குள் கடன் வாங்கிவிட்டு அதற்கான தவணையைத் திருப்பி செலுத்தியவர்கள் மற்றும் கடன் தவணை தடை சலுகை பெற்றவர்களுக்கு, அந்த கடன் தொகைக்கான கேஷ்பேக் வழங்கப்படும்.
எனவே இந்த கடன் தவணை தடை காலத்திற்கான வட்டிக்கு வட்டி கேஷ்பேக் எப்படி வழங்கப்பட உள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.
1) 2020, மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையில், கடன் திட்டங்களின் தவணை தொகைக்கான கூட்டு வட்டியை, எளிய வட்டியாகச் செலுத்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கூட்டு வட்டியாகச் செலுத்தி இருந்தால் அது எளிய வட்டியாகக் கணக்கிடப்பட்டு, கூடுதலாகச் செலுத்தப்பட்ட தொகைக்கு கேஷ் பேக் வழங்கப்படும்.
2) 2020, நவம்பர் 5-ம் தேதிக்குள் இந்த கூடுதலாகச் செலுத்தப்பட்ட தொகைக்கான கேஷ்பேக் வழங்கப்படும்.
3) எல்லா கடன் திட்டங்களில் கடன் பெற்றவர்களுக்கும், கடன் தவணை தடை பெற்று இருந்தாலும், இல்லையென்றாலும் கேஷ்பேக் வழங்கப்படும்.
4) இந்த கேஷ்பேக் தொகையை மத்திய அரசு வங்கிகளுக்கு அளித்துவிடும்.
எளிய வட்டி என்பது அசல் தொகை மீதான வட்டி மட்டும் செலுத்துவதாகும். கூட்டு வட்டி என்பது அசல் தொகைக்கான வட்டி, மற்றும் வட்டிக்கான வட்டியும் சேர்த்துச் செலுத்துவதாகும்.