டிவி

சித்ரா மரண வழக்கில் ஹேமந்த் சிக்கியது எப்படி…? திடுக்கிடும் தகவல்கள்

Published

on

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் முதற்கட்டமாக அவருடைய கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் ஹேமந்த் சிக்கியது எப்படி என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் மற்ற செய்திதளங்களில் வெளியாகியுள்ளது.

அதன்படி, சித்ரா இறந்த முதல் இரண்டு நாட்கள் மட்டும் சோகத்தின் உச்சத்தில் இருப்பதை போல் ஹேமந்த் இருந்துள்ளார். இதை போலீசார் நன்கு கவனித்து கொண்டனர். பின்னர், விசாரணைக்கு அழைத்த போதும் அதே சோகத்துடன் கமல்ஹாசனை மிஞ்சிய முகபாவனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்பிறகு முதற்கட்ட விசாரணை முடிந்ததும் மூன்றாவது நாளாக உண்மை முகம் தெரியவரத் தொடங்கியது. இறந்தது தன் மனைவி தான் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் சிரித்த முகத்துடனே இருந்துள்ளாராம். இது போலீசாருக்கு சந்தேகத்தை தீவிரப்படுத்தியது.

பின்னர் சித்ராவுடனான வாட்ஸ்அப், மெசேஜ்களை ஆராய்ந்த போது அதில் சில மெசேஜ்கள் அழிக்கப்பட்டிருந்தாகவும், ஹேமந்தே அதனை அழித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு சித்ராவிடம் ஹேமந்த் ஆபாசமாக பேசியதாகவும், இதனால் சித்ரா கண்ணீர் விட்டு கதறி அழுதததாகவும் தெரியவந்தது.

இவ்வாறு சித்ராவின் தற்கொலைக்கு காரணம் ஹேமந்தே என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். தற்போது சித்ராவின் பெற்றோரிடமும் நண்பர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Trending

Exit mobile version