சினிமா செய்திகள்
திரையரங்குகளுக்கு வெளி உணவுகளை கொண்டு வந்தால் பாதுகாப்பில்லையா? கேள்வி கேட்கும் நீதிமன்றம்!
பாம்பே உயர் நீதிமன்றம் மல்டிபிளக்ஸ் திரையரங்குக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து வெளி உணவுகளைத் திரையரங்குக்குள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் என்று மகாராஷ்டிரா அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம் என்ன மாதிரியான பாதுகாப்புக் குறைபாடுகள் எல்லாம் ஏற்படும் என்று விளக்க முடியுமா? திரையரங்குள் போன்ற பிற பொது இடங்களில் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லையா, ஏன் விமானங்களில் செல்லும் போது கூடச் சில வெளி உணவுகள் அனுமதிக்கப்படுகின்றதே என்று மகாராஷ்டிரா அரசுக்குக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
உள்ளூர் திரை அரங்குகள் முதல் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள் வரை அனைத்து இடங்களிலும் உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு அதிகம் என்ற நிலையில் பாம்பே நீதிமன்ற தீர்ப்பு முக்கியமானதாகக் கருதப்பட்டது.
ஆனால் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ள நிலையில் எப்போது இந்தத் தீர்ப்பு அமலுக்கு வரும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.