சினிமா செய்திகள்

வட சென்னை படத்தில் சிம்புக்கு பதிலாக தனுஷ் புக் ஆனது எப்படி!

Published

on

சென்னை: வட சென்னை திரைப்படத்தில் சிம்பு தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது தனுஷ் நடிப்பில் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று தனிக்கை செய்யப்பட்டு ‘ஏ’சான்றிதழ் பெற்றுள்ளது.

இதனை அடுத்து இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிப்பு நடிக்க இருந்த வட சென்னை படம் எப்படித் தன்னிடம் வந்தது என்று தனுஷ் கூறினார்.

2004-ம் ஆண்டு முதல் வட சென்னை திரைப்படம் பற்றி நானும் வெற்றிமாறனும் பேசிக்கொண்டு இருந்தோம். ஆனால் அன்று இருந்த சூழலில் இவ்வளவு பெரிய படத்தினை எடுக்க முடியாது என்பதால் பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் உள்ளிட்ட படங்களைச் செய்தோம்.

பின்னர்த் திடீர் என்று ஒரு நாள் சிம்புவை வைத்து வட சென்னை படத்தினை எடுக்க இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்த போது நல்ல விஷயம் பண்ணுங்கள் என்று கூறினேன்.

மீண்டும் ஒரு நாள் போன் செய்து ஒரு முக்கியக் கேமியோ கதாப்பாத்திரத்தில் தன்னை நடிக்கக் கூறிய போது எனக்கு அவ்வளவு பெருந்தன்மை கிடையாது நானும் மனுஷன் தான் என்று கூறினேன்.

அதன் பிறகு சில காரணங்களால் அது டிராப் ஆக வெற்றிமாறன் விசாரணை திரைப்படத்தினை எடுத்தார். பின் ஒரு நாள் வட சென்னையில் நீங்கள் நடிக்க முடியுமா என்று கேட்டார். உடனே தான் மிகவும் சந்தோசப்பட்டதாகவும் ஒரு நடிகருக்கு இப்படி ஒரு படம் கிடைப்பது அதிர்ஷ்டம் என்றும் கூறினார்.

தற்போது படம் மிக நன்றாக வந்துள்ளது. அமீர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அமீரின் பாகத்தினை மட்டும் தனியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக வெற்றிமாறன் கூறினார். ஆனால் ஒரு பாகமாக முடியாது என்பதால் 3 பாகங்களாக எடுத்துள்ளோம் என்றார்.

அது மட்டும் இல்லாமல் கிஷோர், சமுத்திரக்கணி, ஆண்ட்ரியா, ஐஷ்வர்யா ராஜேஷ் எனப் படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாகத் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர் என்றும் சந்தோஷ் நாராயணன் சிறப்பாக இசை அமைத்துள்ளதாகவும் தனுஷ் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version