வணிகம்
மைக்ரோசாஃப்ட் சர்வர் முடக்கத்தில் உலகமே தத்தளித்த நிலையில் சீனா மட்டும் தப்பித்தது எப்படி?
பீஜிங்: ஜூலை 19, 2024 அன்று உலக அளவில் பரவலான IT சிக்கல் ஏற்பட்டு பல நாடுகளை பாதித்தது. ஆனால், இந்த சிக்கலில் இருந்து சீனா பெரும்பாலும் தப்பித்துள்ளது. இதற்கு பின்னணியில் இருக்கும் காரணங்களைப் பார்ப்போம்.
சீனாவின் தகவல் தொழில்நுட்ப சுயசார்பு: சமீப காலங்களில், சைபர் பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் தகவல் தொழில்நுட்ப சுயசார்பு தன்மையை அடைவதை சீனா வலியுறுத்தி வருகிறது. அதாவது, மென்பொருட்கள், கணினி இயக்க முறைகள், மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற வெளிநாட்டு தொழில்நுட்பங்களை குறைவாக நம்பி, தங்களுடைய சொந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவம் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த உலகளாவிய IT சிக்கலுக்கு காரணமான மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் அமெரிக்க நிறுவனமான CrowdStrike ஆகியவற்றின் மென்பொருள் புதுப்பித்தல்கள் போன்றவை சீனாவின் உள்நாட்டு கட்டமைப்பை பெரிதும் பாதிக்கவில்லை.
குறைவான பாதிப்பு:
சீனா முற்றிலும் பாதிப்படையவில்லை என்றாலும், பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. செய்தி அறிக்கைகள் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சீனாவுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களின் கணினிகளே பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
இந்த சம்பவம், தகவல் தொழில்நுட்ப சுயசார்பு தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாட்டு தொழில்நுட்பங்களை மட்டுமே நம்பியிருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க இது உதவும்.