இந்தியா
தனியாக இருந்த ராணுவ வீரரின் மனைவி பலாத்காரம்: வீட்டு உரிமையாளர் வெறிச்செயல்
![Stop Rape - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Stop-Rape.jpg)
நாட்டை பாதுகாப்பதில் முதன்மையானவர்கள் ராணுவ வீரர்கள். நாம் நமது குடும்பத்தினருடன் நிம்மதியாக இருக்க, தங்கள் குடும்பத்தை பிரிந்து எல்லையில் சேவை செய்பவர்கள் ராணுவ வீரர்கள். ஆனால் ஹரியானாவில் தனது கணவரை ராணுவத்துக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் வீட்டின் உரிமையாளர் அத்துமீறி நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.
![Rape 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Rape-1.jpg)
#image_title
ஹரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது மனைவியை தனியாக வாடகை வீட்டில் விட்டுவிட்டு ராணுவ பணிக்காக சென்றுவிட்டார். இதனை தனக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட அந்த வாடகை வீட்டின் உரிமையாளர் சோகன் சிங், அந்த பெண் தனியாக இருந்த நேரத்தில் அங்கு சென்று, ராணுவத்தில் பணியாற்றும் அந்த பெண்ணின் கணவர் விபத்து ஒன்றில் சிக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அந்த பெண்ணிடம், இது குறித்து மேலும் அறிந்துகொள்ள தன்னுடன் வீட்டிற்கு வாருங்கள் என்று சந்தேகம் வராதவாறு தன்னுடையை வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். இதனையடுத்து சோகன் சிங் தனது வீட்டில் வைத்து அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் நடந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அவர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.