செய்திகள்

85 ரூபாய் இருந்தால் போதும்… இத்தாலியில் உங்களுக்கு ஒரு சொந்த வீடு..!

Published

on

வெறும் 85 ரூபாய்க்கு இத்தாலியில் வீடு ஒன்று ஏலத்தின் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

இத்தாலியில் உள்ள காஸ்ட்ரோபிங்னானோ என்னும் கிராமத்தில்தான் இந்த 85 ரூபாய் வீடு உள்ளது. ‘ஒரு யூரோ இல்லம் திட்டம்’ மூலம் ஒரு யூரோவுக்கு ஒரு வீடு விற்பனை என்னும் புதிய திட்டம் இத்தாலிய கிராமங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்திய மதிப்பில் 1 யூரோ 85 ரூபாய் வீதம் அங்கு வீடுகள் விற்பனை நடந்து வருகிறது. இத்தாலியின் கிராமப் புறங்களில் வசிப்பிடங்களை அதிகப்படுத்தவும் மக்களைக் கவரவும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைகளும் சூழ்ந்த கடற்கரையோரம் அமைந்த இந்த கிராமத்தில் இப்படி ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்குபெற முதலில் உள்ளூர் நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் வீடு வாங்குவதற்கான நோக்கம், எதிர்கால திட்டம் என அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

இதில் சிறந்தவர்களை அந்த ஊர் மேயர் தேர்ந்தெடுத்து ஏலம் விடும் நாள் அழைப்பார். அதன் பிறகே ஏலம் கேட்க முடியும். இதில் பங்குபெற கொள்கைத் திட்டம், முன்பணம், கியாரன்டி எனப் பல கையெழுத்துகள் வாங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அரசு திட்டம் என்பதால் உள்ளூஎ மக்கள் ஆர்வம் காட்டியே வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version