Connect with us

தமிழ்நாடு

ஓசூர் எம்.எல்.ஏ மகன் கார் விபத்துக்கு தண்ணீர் பாட்டில் காரணமா?

Published

on

சமீபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் உள்பட 7 பேர் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

முதல்கட்டமாக இந்த கார் விபத்துக்கு முதல் காரணம் அதிவேகமாக கார் சென்றது தான் என்று கூறப்படுகிறது. இருப்பினும் உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட சொகுசு காரான ஆடி காரில் வேகமாக சென்றாலும் பிரேக் போட்டு கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம் தண்ணீர் பாட்டில் என்று தெரியவந்துள்ளது.

காரில் கீழே இருந்த தண்ணீர் பாட்டில் ஒன்று பிரேக் பெடலுக்கு அடியில் சிக்கி இருந்ததாகவும் இதனால் பிரேக் போட முடியாமல் கார் கட்டிடத்தில் மோதி உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கார் சென்ற வழியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா களையும் போலீசார் ஆய்வு செய்த போது இந்த காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் மதுக்கடைக்குள் சென்றதாகவும் அங்கிருந்து அவர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்வது போன்ற காட்சியை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஏழு பேரும் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டதாகவும், அப்போது கருணா சாகர் தான் காரை ஓட்டி உள்ளதாகவும் மற்றொரு சிசிடிவி மூலம் சென்றுள்ளது. மேலும் ஒரு உணவு டெலிவரி செய்யும் நபரை இடிப்பது போன்று கார் சென்று உள்ளது என்றும் அவர் நூலில் உயிர் தப்பியது ஒரு சிசிடிவியில் தெரிந்துள்ளது.

கருணாகரன் தோழியான பிந்து என்பவருக்கு வேலை கிடைத்ததை அடுத்து பார்ட்டி வைப்பதற்காக 7 பேர் கிளம்பி பெங்களூருக்கு சென்றதாகவும், பார்ட்டியை முடித்து விட்டு திரும்பும் போது தான் இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் கருணாசாகர் உள்பட சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,

சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது இந்த விபத்துக்கு காரணம் பிரேக் பெடலுக்கு அடியில் சிக்கியிருந்த தண்ணீர் பாட்டில் என்றும், தண்ணீர் பாட்டில் சிக்கியதால் பிரேக்கை அழுத்த முடியாமல் விபத்தில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் காரில் பயணம் செய்த ஏழு பேருமே சீட் பெல்ட் அணிய வில்லை என்றும் அதனால் இந்த காரில் அதிநவீன வசதியான ஏர்பேக் வசதி இருந்தும் சீட்பெல்ட் அணியாததால் அது திறக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்18 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!