தமிழ்நாடு
பெங்களூர் அருகே சாலைவிபத்து: திமுக எம்.எல்.ஏ மகன் உயிரிழப்பு!
பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டவர் பிரகாஷ். அந்த தொகுதியில் மிக அபாரமாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மகன் கருணா சாகர் உள்பட 7 பேர் பெங்களூருக்கு காரில் சென்றனர். அவர்கள் சென்ற அதி வேகத்தில் சென்றதால் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் கருணாசகர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விபத்து குறித்து கேள்விப்பட்ட பெங்களூரு காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்த 7 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்எல்ஏ மகன் பிரகாஷ் மகன் கருணா சாகர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் திமுகவினர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை அடுத்து திமுக தலைவர்கள் பிரகாஷின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக கர்நாடக மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அதிவேகமாக காரை இயக்கியது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.