Connect with us

ஆரோக்கியம்

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் உடல்நலக் குறைபாட்டுக்கான வீட்டு வைத்தியம்!

Published

on

குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். அவற்றுக்கு நம் வீட்டிலேயே எளிய தீர்வுகள் இருக்கும். அவை குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

துளசி

சளி, ஜுரத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

மஞ்சள்

மஞ்சளில் இயற்கையாகவே நஞ்சை முறிக்கும் தன்மையும் உள்ளது. மஞ்சளை பேஸ்ட போல் குழைத்துக்கொண்டு அதை சூடு கட்டியின் மீது பத்து போடுங்கள்ந்து. இதை தினமும் செய்தால் சூடு கட்டு நீங்கும். மஞ்சள் பொடியை எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலை மாலை சாப்பிட சளி நீங்கும்.

தூதுவளை

மழைக்காலம் நெருங்குவதால் அனைவருக்கும் சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் வரும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நுரையீரல் சார்ந்த நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதில் தூதுவளை பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. தூதுவளையை உலர வைத்துப் பொடி செய்து வைத்து பாலில் கலந்து சாப்பிடலாம். தூதுவளை இலையைத் துவையல் அரைத்தும், ரசம் வைத்தும் சாப்பிடலாம்.

கருமிளகு

கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்லது. கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்க்கவும். இதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து இதை பருகலாம். மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் இருமல் உடனே நிற்கும்.

கிராம்பு

இந்தியாவில் தேநீர் அருந்துபவர்கள் அதிகம். ஆகையால் அது ஆரோக்கியமாக இருப்பது அவசியம். தேநீருக்கு ஆரோக்கியம் சேர்ப்பதில் முக்கியமானது கிராம்பு. உடலில் தொற்று நோய்கள் தாக்காமல், ஈறுகள் பிரச்சனை, அல்சர் போன்றவற்றிலிருந்து கிராம்பு பாதுகாக்கிறது. மேலும், தொண்டை புண், சளி, இருமல், தலைவலி குணமாகவும் உதவுகிறது. கிராம்பு வாங்கும்போது பெரிய கிராம்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

கர்ப்பூரவள்ளி

கர்ப்பூரவள்ளி இலையை முறையை முறைப்படி கொடுத்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற இருமல், நெஞ்சில் சளி, உள்நாக்கு அழற்சி, நீர்க்கோவை அணைத்தும் நீங்கும்.

ஓமம்

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குப் பசியைத் தூண்டுவதற்கு ஓமம் உதவுகிறது. நெஞ்சு சளி, வறட்டு இருமல் இருப்பவர்களுக்கு ஓமம் சிறந்த மருந்தாக அமைகிறது. வயிற்றுப் பகுதியில் புண் இருப்பவர்கள் கண்டிப்பாக ஓமம் கசாயத்தைக் குடித்து வந்தால் வயிற்றுப்புண் சரியாகிவிடும. செரிமான சக்தியை தூண்டுவதிலும் ஓமம் சிறந்த மருந்தாக அமைகிறது. தண்ணீரில் ஓமம், தேனை கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

வெங்காயம்

நெருப்பில் சுட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும்.

சீரகம்

நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராகப் பராமரிக்கச் சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். இது சுவாச கட்டமைப்புக்கு நன்மை சேர்த்து, சளியைக் குணப்படுத்தும். மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவி செய்கிறது. அசிடிட்டியையும் குணமாக்கும். ஆனால், தினசரி சீரகம் சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வெற்றிலையின் 10 அதிசய நன்மைகள் யாருக்கும் தெரியாது

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எலுமிச்சை பழத்தோல்கள் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் பழுப்பு நிறத்தில் மாறுகின்றன: இனி இப்படி சேமித்து வைக்கவும்

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எலும்புகளை வலுப்படுத்த சில உணவு வகைகள்:

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 4, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது?

ஆரோக்கியம்1 நாள் ago

நிலவேம்பு: நீரிழிவு நோய்க்கு உதவுமா?

செய்திகள்1 நாள் ago

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5 ஆட்டோமேட்டிக் கார்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

10ம் வகுப்பு, +2 படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 1526 காலிப்பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வணிகம்2 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

வணிகம்3 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்