தமிழ்நாடு
மருந்துகளை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் வசதிக்காக மருந்துகளை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, 1800 1212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு மருந்துகளை ஹோம் டெலிவரி பெறலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஹோம் டெலிவரி சேவையில் தமிழகம் முழுவதும் 5,000 மருந்து சங்க பணியாளர்கள் இணைந்துள்ளனர். இந்த புதிய சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிஎம்எஸ் வளாகத்தில் ஹோம் டெலிவரி சேவையை தொடங்கிவைத்தார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.