Connect with us

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு நல்ல ஞானத்தை கொடு: தஞ்சை பிரகதீஸ்வரரிடம் மனு கொடுத்த இந்து முன்னணி!

Published

on

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பிரகதீஸ்வரரிடம் தமிழக அரசுக்கு நல்ல ஞானத்தை கொடு என இந்து முன்னணியினர் கோரிக்கை மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு அனுமதி இல்லை என்றும் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் நிறுவ மற்றும் ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்க தடை என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்புக்கு இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்து முன்னணி மாநில செயலாளர் முருகானந்தம் இன்று தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர், நந்தி மற்றும் தாயார் ஆகியோர்களிடம் அர்ச்சகர் மூலமாக மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசுக்கு வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழாவை நடத்த அனுமதிக்கும் அளவுக்கு நல்ல ஞானத்தை கொடு என்றும் இந்த விழாவினை சிறப்பாக நடத்த தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்கும் அளவுக்கு அருள்புரிய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த மனு தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தி, மூலவர் பிரகதீஸ்வரர், தாயார் பெரியநாயகி அம்மன் ஆகியோர்கள் முன்வைத்து மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை பெரிய கோவிலில் கோரிக்கை மனு கொடுத்து வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுவை கொடுத்துள்ளதாக இந்து முன்னணி மாநில செயலாளர் முருகானந்தம் உள்பட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்துக்களை பழிவாங்கும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் சமூக இடைவெளியுடன் விநாயகர் வழிபாடு நடத்த, ஊர்வலம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!