தமிழ்நாடு

அருள்வாக்கு அன்னபூரணியை கைது செய்ய இந்து மக்கள் கட்சி புகார்!

Published

on

தன்னைதானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணியை உடனே கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கள்ளக்காதல் தொடர்பான பஞ்சாயத்து ஒன்றில் கலந்து கொண்டவர் அன்னபூரணி.

இந்த நிலையில் இவர் திடீரென தற்போது ஆதி பராசக்தியின் அவதாரம் என்றும் கூறி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.அதுமட்டுமின்றி திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து காணிக்கை வசூலித்து ஆசி வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அருள்வாக்கு அன்னபூரணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாக இருக்கும் அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக போலி சாமியார் அன்னபூரணி செயல்பட்டு வருவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version