உலகம்

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

Published

on

அதானி நிறுவனம் குறித்த அறிக்கை வெளியிட்டு அந்நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ஹண்டன்பர்க் நிறுவனம் சொந்த நாட்டில் மிகப்பெரிய வங்கி ஒன்று திவால் ஆனது கூட தெரியாமல் இருந்துள்ளது என ஹண்டன்பர்க் நிறுவனத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஹண்டன்பர்க் நிறுவனம், அதானி குழும நிறுவனங்கள் குறித்த அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அதானி குடும்பத்தின் சரிவு ஹண்டன்பர்க் நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் பெரும் லாபத்தை கொடுத்துள்ளதாகவும் அதானி நிறுவனத்தின் மோசடியை வெளிப்படுத்துவதாக கூறி ஹண்டன்பர்க் சுய லாபம் அடைந்தது என்றும் குற்றச்சாட்டுகளை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகவும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கு பெரிய கடன் வழங்கும் நிறுவனமாகவும் இருந்த சிலிக்கன் வேலி வங்கி வீழ்ச்சி அடைந்து கடந்த வாரம் திவால் ஆனது. இந்த வங்கி தங்களுக்கு இருந்த பணம் தீர்ந்து விட்டதாகவும் புதிய மூலதனத்தை திரட்டுவதாகவும் கடன் வழங்குபவரின் கட்டுப்பாட்டை ஒரு நாளுக்குள் கட்டுப்பாளர் கைப்பற்றியதால் மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க அரசு சிலிக்கான் வேலையை வங்கியை கையில் எடுத்து அதன் டெபாசிட் காரர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதானி நிறுவனத்தின் மோசடி குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்ட ஹண்டன்பர்க் நிறுவனம் தனது சொந்த நாட்டில் உள்ள வங்கி அமைப்பில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் இருந்து உள்ளதா? அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததா? என நெட்டிசன்கள் சரமாரியாக கேள்விகளுக்கு உள்ளனர்.

இந்தியாவின் அதானி குழுமத்தின் பங்குகளை ஷார்ட் செய்து மிகப் பெரிய லாபம் பார்த்த ஹண்டன்பர்க் நிறுவனம் சிலிக்கன் வேலி வங்கியின் பங்குகளை ஷார்ட் செய்ய மறந்துவிட்டதா என்றும் பலர் நெட்டிசன்கள் கிண்டலுடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 700 டாலரில் இருந்த அந்த வங்கியின் பங்கு தற்போது 40 டாலர் வரை சரிந்து உள்ளதை அடுத்து ஹண்டன்பர்க் ஒரு மிகப்பெரிய லாபத்தை தவற விட்டுவிட்டது என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர்.

சொந்த நாட்டில் உள்ள வங்கி என்பதால் அதன் முறைகேடுகளை தெரிவிப்பதற்கு ஹண்டன்பர்க் நிறுவனத்திற்கு தைரியம் இல்லையா? அல்லது விரும்பவில்லையா? என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஹண்டன்பர்க் அறிக்கையால் பாதிக்கப்பட்டிருந்த அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றன என்பது முதலீட்டாளர்கள் தங்கள் நஷ்டத்தை மீட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version