இந்தியா
கர்நாடகாவை அடுத்து மத்திய பிரதேசத்திலும் ஹிஜாப்புக்கு தடை!
கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து 3 நீதிபதிகள் அமர்வு கொண்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சில முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து அந்த கல்லூரியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அந்த கல்லூரியின் முதல்வர் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட எந்தவித மத அடையாள சின்னங்களை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அணிந்து வருபவர்கள் கல்லூரிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளர்.
கர்நாடகாவை அடுத்து மத்திய பிரதேச மாநிலத்திலும் தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து நாடு முழுவதும் ஒருமித்த கருத்தை ஏற்படும் வகையில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன