உலகம்

குறையாத கொரோனா இறப்புகள். அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்!

Published

on

அமெரிக்காவில் கொரோனாவல் நேற்று ஒரே நாளில் 1974 நபர்கள் இறந்துள்ளது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,81,099 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1974 நபர்கள் இறந்துள்ளது அமெரிக்கர்களை அதிர்ச்சியடை செய்துள்ளது.

தொடர்ந்து இத்தாலியில் 36,176 நபர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 653 நபர்கள் இறந்துள்ளனர். பிரேசிலில் 644 நபர்களும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.

இந்தியாவில் 46,182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒரே நாளில் 584 நபர்கள் இறந்துள்ளனர்.

உலகளவில் இதுவரை 5,71,06,666 நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதுவரை 13,64,754 நபர்கள் இறந்துள்ளனர். 3,96,94,917 நபர்கள் மீண்டு வந்துள்ளனர். 1,61,46,995 நபர்கள் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர் என்று உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version