தமிழ்நாடு
வாரத்தில் எத்தனை நாட்கள் கல்லூரிகள் இயங்க வேண்டும்: உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
வாரத்தில் எத்தனை நாட்கள் கல்லூரிகள் இயங்க வேண்டும் என்பது குறித்து உயர் கல்வித் துறை அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்ததால் விடுக்கப்பட்ட விடுமுறை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே விடுக்கப்பட்ட விடுமுறையை கணக்கில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அதாவது கல்லூரிகள் அனைத்தும் வாரத்திற்கு ஆறு நாட்கள் நேரடி முறையில் இயங்க வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் திங்கள் முதல் சனி வரை அனைத்து கல்லூரிகளும் இயங்கும் என அது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜனவரி 26 ஆம் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என்றும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வாக மட்டுமே நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.