தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஹை பிரஷர்: அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதின் பின்னணி!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பல் வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பரிசோதித்த மருத்துவரை அவரை பிஷர் ஒருமுறை செக் செய்துகொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் தனது வேலைகளில் பிஸியாக இருந்த முதல்வர் அதுபற்றி மறந்தே விட்டார். இந்நிலையில் சில மூன்று நாட்களுக்கு முன்னர் இரவு தூங்குவதற்கு சென்றவர் சற்று சோர்வாக இருப்பதாக உணர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து தான் அவர் பிரஷர் செக் செய்துகொள்ள முயன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு பிஷர் மட்டுமல்லாமல், முழு உடல் பரிசோதனையும் நடந்திருக்கிறது. அதில் அவரது இதயத்தி எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் பல் மருத்துவர் கூறியபடி பிரஷர் தான் அதிகமாக இருந்திருக்கிறது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஹை பிரஷரை சமாளிக்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டும் என வலியுறுத்தி மாத்திரை கொடுத்திருக்கிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version