Connect with us

தமிழ்நாடு

லதா ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை – பின்னணி என்ன?

Published

on

ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

ஶ்ரீ ராகவேந்திர கல்விச் சங்கம், சென்னையில் உள்ள கிண்டியில் ‘ஆஸ்ரம்’ என்கின்ற பெயரில் ஓர் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த கல்விச் சங்கத்தின் செயலாளராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். கிண்டியில் செயல்பட்டு வரும் ஆஸ்ரம் பள்ளி வேறொருவர் நிலத்தில் அமைந்துள்ளது. இதற்காக ராகவேந்திர கல்விச் சங்கம் மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடத்துக்கு சொந்தக்காரர்களுக்கு ராகவேந்திரா கல்விச் சங்கம் சார்பில் சரிவர வாடகை செலுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஆஸ்ரம் பள்ளியின் கேட் திடீரென்று இழுத்து மூடப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டது. அதே நேரத்தில் வாடகைப் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இப்படியான சூழலில் கடந்த 2018 ஆம் ஆண்டு இரு தரப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து சுமுகத் தீர்வு எட்டப்பட்டது. அதன்படி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு இடத்தை காலி செய்துவிடுவதாக ராகவேந்திரா கல்விச் சங்கம் உத்தரவாதம் கொடுத்தது.

இப்படி எல்லாம் சரியாகும் தருணத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்டது. இதனால் குறித்த காலக்கெடுவுக்குள் இடத்தை காலி செய்ய முடியவில்லை என்றும், எனவே காலக்கெடுவை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும் என்றும் ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளரான லதா ரஜினிகாந்த் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் ராகவேந்திரா கல்விச் சங்கம், ‘மாத வாடகையை முறையாக செலுத்தி வருகிறோம். எனவே காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றம், ‘காலக்கெடுவை நீட்டுத்து உத்தரவிடுகிறோம். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் இடத்தை காலி செய்யவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாவீர்கள். மேலும், தற்போது பள்ளி இயங்கும் முகவரியில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

 

 

author avatar
seithichurul
சினிமா44 நிமிடங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்55 நிமிடங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்1 மணி நேரம் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!