தமிழ்நாடு

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் முதல் நபர் கைது.. யார் தெரியுமா?

Published

on

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் முதல்நபராக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்து நசரேத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதனிடையே சித்ராவின் பெற்றோரிடமும், ஹேம்நாத்திடமும் கடந்த 6 நாட்களாகபோலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், அண்மையில் நடிகை சித்ரா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹோட்டல் ஊழியர்கள் என அனைவரிடத்திலும் போலீசார் விசாரித்தனர்.

இந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். ஹேம்நாத்தை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த உள்ளனர். சித்ராவின் தற்கொலை வழக்கில் முதல் நபராக ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version