இந்தியா
4 வயதுக்குட்பட்ட குழந்தைக்கும் ஹெல்மெட் கட்டாயம்…மத்திய அரசு உத்தரவு…
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம்(ஹெல்மெட்) அணிய வேண்டும் என பல வருடங்களுக்கு முன்பே விதிமுறை வந்துவிட்டது. தற்போதும் இது நடைமுறையில் இருக்கிறது.
அதன்பின் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றால் பின்னால் அணிந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என புதிய விதிமுறைகளை அறிவித்தார்கள். ஆனால், யாரும் அதை பின்பற்றுவதில்லை.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது. மேலும், 4 வயதுக்குட்பட்ட குழந்தையை அழைத்து செல்லும்போது 40 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்கிற விதிமுறையும் அமுலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டவிதி 2023 பிப்ரவரி 15 முதல் அமுலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.