தமிழ்நாடு
கண்டறியப்பட்டது கருப்பு பெட்டி: விசாரணையை துரிதப்படுத்த ராணுவம் முடிவு!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று இராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில் அந்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி சற்றுமுன் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நேற்று மதியம் திடீரென விபத்துக்குள்ளாகி. இந்த விபத்தில் ராபர்ட் அவருடைய மனைவி உள்பட 13 பேர் மரணமடைந்தனர் என்பதும் வருண் சிங் என்ற விமானப்படை தளபதி கேப்டன் மற்றும் உயிர் பிழைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில் இதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் முதலில் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர் என்பதும் நள்ளிரவு 12 மணிவரை மீட்பு பணிகளும் கருப்பு பெட்டியை தேடும் பணிகள் நடைபெற்றது அது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி சற்றுமுன் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அந்த கருப்பு பெட்டியில் விமானி மற்றும் ராணுவத்திற்கும் இடையே நடந்த உரையாடலை கேட்டு அடுத்த கட்ட விசாரணையை தொடங்க ராணுவ அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.